திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 367 மனுக்கள் அளிக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 367 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரவிசந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பால்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.