திருவாரூர் அருகே வீடு புகுந்து மர்ம நபர்கள் நகைகளை திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
திருவாரூர் அருகேயுள்ள விளமல் கே.கே. நகரில் வசிப்பவர் சேகரன் மனைவி உமாராணி (59). இவர் எண்கண் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றவர் அங்கேயே தங்கியுள்ளார். அங்கு தனது நகைகளை கழட்டி பீரோவில் வைத்து விட்டு தூங்கினாராம். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகளை காணவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில் குடவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.