திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அகில பாரத இந்து மகா சபா அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட புகார் மனு:
திருப்பனந்தாள் பகுதியில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தஞ்சை ராஜராஜசோழன் குறித்து அவதூறாகவும், ஜாதிக்கலவரத்தை தூண்டும் வகையிலும் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் பேசினார். எனவே அவர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.