உரிய தேதியில் ஊதியம் வழங்க வலியுறுத்தி, திருவாரூரில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் உரிய தேதியில் ஊதியம் வழங்கப்படவில்லை. இதை சரிசெய்து மாதக் கடைசி நாளில் ஊதியம் வழங்க வேண்டும். அதேபோல் ஓய்வூதியதாரர்களுக்கும் உரிய தேதியில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும் அஞ்சல் ஊழியர்களுக்கான படித்தொகைகளும் உரிய தேதியில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் தலைமை அஞ்சலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அஞ்சல் ஊழியர் சங்கத்தின் தலைவர் பி. லெட்சுமணன் தலைமை வகித்தார். இதில் செயலர் ஜே. சசிக்குமார், முன்னாள் செயலர் கே. ராமலிங்கம், ஆர்எம்எஸ் முன்னாள் செயலர் வீ. தர்மதாஸ், நகர வங்கி ஊழியர் சங்கத் தலைவர் என். காளிமுத்து, கிளை துணைச் செயலர் சாந்தி, மகிளா குழுத் தலைவர் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.