திருத்துறைப்பூண்டியில் மாமன்னன் ராஜராஜ சோழனின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக திரைப்பட இயக்குநர் ரா. ரஞ்சித்தை கண்டித்து, தமிழக மக்கள் எழுச்சி இயக்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இயக்கத்தின் தலைவர் சிங்கை சரவணன் தலைமை வகித்தார். இதில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு இயக்குநர் பா.ரஞ்சித்தை கண்டித்து முழக்கம் எழப்பினர்.