சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்தக் கோரிக்கை

நீடாமங்கலம் பகுதியில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நீடாமங்கலம் பகுதியில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நீடாமங்கலம்  பேரூராட்சியில் தெரு சாலைகள் அமைக்க பல்வேறு தெருக்களில் கருங்கல் ஜல்லி கலவை கொட்டப்பட்டு பல நாட்களாகியும் இதுவரை தார்ச்சாலை அமைக்கவில்லை. இதனால், தெருக்கள் வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர், பாதசாரிகள் மிகுந்த அவதிப்பட வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி தார்ச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com