கொரடாச்சேரி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம், நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
கொரடாச்சேரி அருகே உள்ள ஓகைப் பகுதியில் வசிப்பவர் தங்கையன் மகன் இளங்கோவன் (45). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஊருக்கு அருகே உள்ள சேங்காலிபுரம் சென்று விட்டு, திங்கள்கிழமை காலையில் வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். அத்துடன் வீட்டிலிருந்த 13 பவுன் நகை, ரூ. 7500 ரொக்கம் உள்ளிட்டவை திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, இளங்கோவன் அளித்த புகாரின் பேரில் குடவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.