திருவாரூர் மாவட்டத்தில், கஜா புயலில் சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத் துறையினருக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில், பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில், கஜா புயலில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவாரூர் அருகே உள்ள புலிவலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் ந. ஞானப்பிரகாசம் தலைமை வகித்தார்.
மாநிலச் செயலாளர் ஜோ. கதிர்வேல், பொருளாளர் ரெ. கோபிநாத், மாவட்டத் தலைவர் சி. மணவழகன், மாவட்டச் செயலாளர் அ. முகமது முகைதீன், இணைச் செயலாளர் சு. கிரண்குமார் உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.