பொறுப்பேற்பு

கூத்தாநல்லூர் நகராட்சி புதிய  ஆணையராக டி. ராஜகோபாலன் (பொறுப்பு) அண்மையில் பொறுப்பேற்றார்.


கூத்தாநல்லூர் நகராட்சி புதிய  ஆணையராக டி. ராஜகோபாலன் (பொறுப்பு) அண்மையில் பொறுப்பேற்றார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி பல்வேறு துறைகளில் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன்,  அருப்புக்கோட்டைக்கும், கூத்தாநல்லூர் நகராட்சி பொறியாளர் சந்திரசேகரன் ஜெயங்கொண்டத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, கூத்தாநல்லூர் நகராட்சி புதிய ஆணையராக கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி பொறியாளர் மற்றும் ஆணையர் பொறுப்பு வகித்த டி. ராஜகோபாலன் நியமிக்கப்பட்டார். இவர், அண்மையில் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மற்றும் பொறியாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர், கூத்தாநல்லூர் நகராட்சிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களை அவர் பார்வையிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com