மன்னார்குடி அருகே தாய் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற மனைவி, வீடு திரும்பவில்லை என கணவர் சனிக்கிழமை போலீஸில் புகார் செய்தார்.
செருமங்கலம் உடையார் தெருவைச் சேர்ந்தவர் ஆர். செழியன். இவரது மனைவி பிரமிளா (42). இவர் கடந்த 13-ஆம் தேதி பைங்காநாட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு கணவர் வீட்டில் இருந்து சென்றாராம். பின்னர், அங்கு செல்லாததுடன் கணவர் வீட்டுக்கும் திரும்பி வரவில்லையாம். இது குறித்து வடுவூர் காவல் நிலைத்தில் செழியன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.