மன்னார்குடியில் ஜேசிஐ பவர் அமைப்பு சார்பில் உலக நுகர்வோர் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஜேசிஐ பவர் அமைப்பின் தலைவர் பி. சரவணன் தலைமை வகித்தார். மன்னார்குடி நுகர்வோர் சங்க பொதுச் செயலாளர் சா. சம்பத், உணவுப் பொருள்களில் கலப்படங்களை கண்டறியும் முறை பற்றியும், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் பேசினார். மூளை வளர்ச்சிக் குறைவு, சிந்திக்கும் ஆற்றல் குறைவு, உடல் வளர்ச்சிப் பதிப்பு போன்றவை அயோடின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது என்றும், எனவே, அயோடின் கலந்த உப்பை அவசியம் பயன்படுத்த வேண்டும் எனவும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் வீடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட உப்பில் அயோடின் கலந்துள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நுகர்வோர் சங்க செயலாளர் த. கலைவாணன், பொருளாளர்
வி. ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.