குருங்குளம் பதினோறு ஆலய கும்பாபிஷேகம்

நன்னிலம் வட்டம், பேரளம் அருகே உள்ள குருங்குளத்தில் பதினோறு ஆலய கும்பாபிஷேகம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் வட்டம், பேரளம் அருகே உள்ள குருங்குளத்தில் பதினோறு ஆலய கும்பாபிஷேகம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அருணகிரிநாதரால் பாடல் பெற்ற கந்தன்குடி அருகே உள்ள 21குருங்குளம் கிராமத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர், விநாயகர், ஸ்ரீதேவி பூமி நீலா சமேத வரதராஜப் பெருமாள், மந்தகரை மாரியம்மன், பூர்ண புஷ்கலா சமேத ஐயனார், தில்லை காளியம்மன், செல்லியம்மன், அங்காளம்மன், முனீஸ்வரர், வன ஐயனார், சித்தி விநாயகர் உள்ளிட்ட பதினோறு தெய்வங்களின் ஆலய திருப்பணிகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, மகா கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் நடைபெற்றுவந்தன.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) காலை விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், பின்னர் சிவாலய மகா கும்பாபிஷேகமும் சிவாகம முறைப்படி நடைபெற்றது. திருக்கண்ணங்குடி சிவாச்சாரியார் டி.கே. பாலாமணி சிவாச்சாரியார், கந்தன்குடி கெளரீச சிவாச்சாரியார், குருங்குளம்  முத்துக்குமார சிவாச்சாரியார் உள்ளிட்டோர் கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com