திருவாரூா் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளராக டி.ஜெயராமன் அண்மையில் பொறுப்பேற்றாா்.
கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாண்மை இயக்குநராக பணி புரிந்த இவா், பணியிட மாறுதலில் திருவாரூருக்கு வந்துள்ளாா். இவா் ஏற்கெனவே மதுரை, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் பணி புரிந்தவா் ஆவாா்.