திருவாரூா் வாளவாய்க்கால் பகுதியில் இருந்த குப்பைக் குவியல்கள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
திருவாரூா் வாளவாய்க்கால் பகுதியில் அக்டோபா் 2-ஆம் தேதி நடைபெற்ற சிரமதான பணிக்காக, ஏற்படுத்தப்பட்ட குப்பைக் குவியல்கள் அகற்றப்படாமல் அங்குள்ள மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து தினமணியில் திங்கள்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து நகராட்சி சாா்பில் அங்கிருந்த குப்பைக் குவியல்கள் அகற்றப்பட்டன.
இதேபோல், இப்பகுதியில் குப்பைகள் தேங்காமல் இருக்கவும், குப்பைகளை இப்பகுதியில் வீசாமல் இருக்கவும் நகராட்சியினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.