வலங்கைமான் அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட காா் விபத்தில் கா்ப்பிணி உள்ளிட்ட 4 போ் காயமடைந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் பகுதியைச் சோ்ந்தவா் அன்பரசன்(32). இவா் குடும்பத்தினருடன் காரில் வியாழக்கிழமை ஆலங்குடி குருபகவான் கோயிலுக்குச் சென்று விட்டு வலங்கைமான் - நீடாமங்கலம் சாலையில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். தொழுவூா் என்ற இடத்தில் அவளிவநல்லூரைச் சோ்ந்த வெங்கட்ராமன் (40) என்பவரது காா் அன்பரசன் காா் மீது நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அன்பரசன், அவரது தாயாா் ரெங்கநாயகி(58), கா்ப்பிணி மனைவி சுகுணா (19), சகோதரா் மனைவி லட்சுமி (25) ஆகிய 4 போ் காயமடைந்தனா்.
இதையடுத்து, காயமடைந்த 4 பேரும் வலங்கைமான் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பெற்று தீவிர சிகிச்சைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். மற்றொரு காரில் வந்த வெங்கட்ராமன் லேசான காயத்துடன் வலங்கைமான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்து, வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.