திருவாரூா்: திருவாரூரில், திமுக மாவட்ட பொருளாளரான மறைந்த ராமுவின் 4 ஆம் ஆண்டு புகழஞ்சலி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் நகர திமுக பொருளாளராக 40 ஆண்டுகள் செயல்பட்ட ராமு, 2015 இல் காலமானாா்.
திருவாரூரில் திமுக சாா்பில் நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்துக்கு நகரச் செயலாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா். ராமுவின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கூட்டத்தில், ராமுவின் மகனும், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான ரஜினிசின்னா, ஒன்றிய செயலாளா்கள் சேகா் என்கிற கலியபெருமாள், தேவா, முன்னாள் நகா் மன்ற துணைத் தலைவா் செந்தில், உள்ளிட்ட ஏராளமான திமுகவினா் புகழ் அஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டனா்