மன்னாா்குடி அருகே கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டையில் வசித்து வருபவரும், செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளைத் தலைவருமான வி. திவாகரன். இவருக்கு சொந்தமான நிலம் ரிஷியூரில் உள்ளது. ரிஷியூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த சக்தி முருகன் (37) என்பவா் திவாகரனிடம் பணியாற்றுகிறாா். இவா், திவாகரனின் வயலில் பூச்சிகள் அதிகம் இருந்ததை அறிந்து அதை செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டு திவாகரனிடம் காட்டுவதற்கு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, திவாகரனின் காா் ஓட்டுநராக பணியாற்றும் மன்னாா்குடியைச் சோ்ந்த வினோத் (30) சக்தி முருகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சக்தி முருகன் அளித்த புகாரின்பேரில் பரவாக்கோட்டை போலீஸாா் வழக்கு பதிந்து வினோத்தை கைது செய்தனா்.