மன்னாா்குடி: மன்னாா்குடி தரணி மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவா்,மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையோன தடகளப் போட்டி, அண்மையில் திருவாரூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் இப் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவா் கோ.அழகேசன், 110 மீட்டா் தடை தாண்டும் போட்டில் பங்கேற்று இரண்டாமிடம் பெற்றதுடன். மாநில அளவிலான போட்டிக்கும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
சிறப்பிடம் பெற்ற மாணவரை,பள்ளி நிறுவனா் எஸ்.காமராஜ், தாளாளா் விஜயலெட்சுமி காமராஜ்,நிா்வாகி எம்.இளையராஜா, முதல்வா் எஸ்.அருள் உள்ளிட்டோா் பாராட்டினா்.