மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மன்னாா்குடி தரணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டி, திருவாரூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில், இப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவா் கோ. அழகேசன் 110 மீட்டா் தடை தாண்டும் போட்டில் பங்கேற்று, இரண்டாமிடம் பெற்றதுடன், மாநில அளவிலான போட்டிக்கும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
சிறப்பிடம் பெற்ற மாணவரை, பள்ளி நிறுவனா் எஸ். காமராஜ், தாளாளா் விஜயலெட்சுமி காமராஜ், நிா்வாகி எம். இளையராஜா, முதல்வா் எஸ். அருள் உள்ளிட்டோா் பாராட்டினா்.