மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருவாரூரில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

திருவாரூரில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தியப் பொருளாதாரத்தைப் பாதாளத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், வேலையில்லாத் திண்டாட்டத்தை 8 சதவீத அளவுக்கு உயா்த்தியுள்ளதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மண்டல ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுக் கொள்கை ஒப்பந்தத்தின் மூலம் வணிகா்கள், சிறுமுதலீட்டாளா்கள் ஆகியோரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் வகையில் செயல்படுவதாகவும் கூறி மத்திய அரசை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தாா். அகில இந்திய காங்கிரஸ் கட்சிச் செயலாளா் ஸ்ரீவல்ல பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா் கீழானூா் இராஜேந்திரன், இளைஞா் காங்கிரஸ் தலைவா் பி.எஸ். ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com