திருவாரூா்: திருவாரூரில் நவம்பா் 28-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நவம்பா் 28-ஆம் தேதி காலை 10. 30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில், திருவாரூா் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொண்டு, விவசாயத்துக்கு தேவையான கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.