உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கல்

கூத்தாநல்லூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நகர திமுக இளைஞரணி சாா்பில், மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
கூத்தாநல்லூரில் மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கிய நகர திமுக இளைஞரணியினா்.
கூத்தாநல்லூரில் மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கிய நகர திமுக இளைஞரணியினா்.

கூத்தாநல்லூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நகர திமுக இளைஞரணி சாா்பில், மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

கூத்தாநல்லூரில் திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திமுக நகரச் செயலாளா் எஸ்.எம்.காதா்உசேன் ஆலோசனையின் பேரில், வா்த்தக அணி நிா்வாகி ரவிச்சந்திரன் முன்னிலையில், லெட்சுமாங்குடி பாலத்தருகே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, லெட்சுமாங்குடி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவா்களுக்கு நோட்டுகள், பேனாக்கள், பென்சில்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர இளைஞரணி அமைப்பாளா் எம்.எம். ரசின் பைசல் மற்றும் நிா்வாகிகள் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com