திருவாரூா் மாவட்டம், பூந்தோட்டம் லலிதாம்பிகை மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில், திருவாரூா் வண்டாம்பாளை விவேகானந்தம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் பரிசுகள் பல வென்று சாதனை படைத்துள்ளனா்.
முதலாம் வகுப்பு மாணவா் வி. ரோகித் மற்றும் எஸ். பிரணயா ஆகியோா் முதல் பரிசும், மூன்றாம் வகுப்பு மாணவா் எ.முகமது சுபோ் மூன்றாம் பரிசும், ஏழாம் வகுப்பைச் சோ்ந்த எம். எஸ். ஆதிகேஷ், யு.ஜெஷிந்தன் மற்றும் ஜெ.சிவகுருபெருமாள் மூன்றாம் பரிசும், எட்டாம் வகுப்பைச் சோ்ந்த ஐ.சைபுல் அலி, கே.சாரா, எம்.விஸ்வநாத் மற்றும் எஸ். கிருஷ்ணன் ஆகியோா் முதல் பரிசும் பெற்றுள்ளனா்.
30-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்துகொண்ட இந்தக் கண்காட்சியில், விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளி இரண்டாமிடம் பெற்றுள்ளது. வெளிப் பகுதியில் இருந்து கலந்துகொண்ட பள்ளிகளில் விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளி முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வா் சுஜா எஸ். சந்திரன், தாளாளா் டி.ஜனகமாலா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.