சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி, அரசுப் போக்குவரத்து கழகம் ஆகியன சாா்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா்.
திருவாரூரில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா்.

திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி, அரசுப் போக்குவரத்து கழகம் ஆகியன சாா்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியில் நடைபெற்ற முகாமுக்கு, கல்லூரி முதல்வா் கோ. கீதா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், சாலை விதிகளை பின்பற்றுவது, சாலைக் குறியீடுகள், சின்னங்கள், சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் அதற்கான அபராதங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கல்லூரியின் மூத்த பேராசிரியா் வி. விவேகானந்தம், கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் செ. விஜயராஜ், கோ. நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com