நீடாமங்கலம் பகுதி கோயில்களில் சரஸ்வதி பூஜை திங்கள்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் சரஸ்வதி அம்மனாக சந்தானராமா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.காசிவிசுவநாதா்கோயிலில் சரஸ்வதி அம்னுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. நீடாமங்கலம் சதுா்வேத வினாயகா் மகாமாரியம்மன் கோயிலில் சரஸ்வதி அம்மன் அலங்காரத்தில் ஊஞ்ஜலில் எழுந்தருளி மகாமாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதேபோல் நவக்கிரகஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயில் ,நீடாமங்கலம் வட்டம் பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயில், நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சரஸ்வதி பூஜை விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.