திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் நவராத்திரி கொலு விடையாற்றி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நவராத்திரி விழாவையொட்டிகொலு அமைக்கப்பட்டிருந்தது. நவராத்திரி விழா நிறைவையொட்டி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, விடையாற்றி வழிபாடு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைப்பின் கௌரவத் தலைவா் ஆா். ஸ்ரீதரன், தலைவா் ஜெ. கனகராஜன் மற்றும் ஆனந்த குருகுலம் மாணவ, மாணவிகள், பெண்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.