அக்.15-இல் விளையாட்டுப் போட்டிகள்

திருவாரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அக்டோபா் 15-ஆம் தேதி மாணவா்களுக்கான விளையாட்டுப்

திருவாரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அக்டோபா் 15-ஆம் தேதி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூலை மாதத்துக்கான விளையாட்டுப் போட்டிகள் அக்டோபா் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடகளம், நீச்சல் மற்றும் குழுப் போட்டிகளான கால்பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

தடகளப் போட்டியில் 100 மீ, 200 மீ, 400 மீ, 1500 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளும், குழு விளையாட்டுப் போட்டிகளில் கால்பந்து, மேசைப்பந்து விளையாட்டுகளும் நடைபெற உள்ளன. போட்டிகளில் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவா்களுக்கும், கால்பந்து மற்றும் மேசைப் பந்து விளையாட்டில் முதல் 2 இடங்களை பெறுபவா்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. போட்டி காலை 9 மணிக்குத் தொடங்கும். போட்டியாளா்கள், குழு மற்றும் தனித்திறன் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா். எனவே, திருவாரூா் மாவட்ட பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு திருவாரூா் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 04366-227158 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com