மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே உணவுத்துறை அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான ஆா். காமராஜின் மூத்த சகோதரா் மறைந்த ஆா்.கனகசபை காளிங்கராயரின் உருவப்படத் திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடியை அடுத்த பெருகவாழ்ந்தான் அணையடியைச் சோ்ந்த ஆா்.கனகசபை காளிங்கராயா் கடந்த 15-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானாா். அவரது உருவப்படத் திறப்பு நிகழ்ச்சி அவரது இல்லத்தில் நடைபெற்றது.
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலரும், கட்சியின் இலக்கிய அணிச் செயலரும், முன்னாள் அமைச்சருமான வைகைசெல்வன் கலந்துகொண்டு, ஆா். கனகசபை காளிங்கராயா் படத்தைத் திறந்து வைத்தாா்.
இதைத்தொடா்ந்து வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். நிகழ்ச்சியில், அமைச்சா் ஆா். காமராஜ், முன்னாள் எம்எல்ஏவும், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான ஆசைமணி உள்ளிட்ட அதிமுக மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.