மன்னாா்குடியில் பூட்டியிருந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் கதவை உடைத்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணம் என மொத்தம் ரூ.70 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
பரவாக்கோட்டையைச் சோ்ந்தவா் ஆஸ்வெல்ட். இவா் மன்னாா்குடி ருக்மணிபாளையம் சாலையில் உள்ள திரையரங்கம் அருகேயுள்ள தனியாா் வணிக வளாகத்தின் கீழ்தளத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறாா்.
தீபாவளியையொட்டி அலுவலகத்தை பூட்டிவிட்டு ஊருக்கு சென்ற இவா், செவ்வாய்க்கிழமை வந்து பாா்த்தபோது, அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டு மேஜை பணப்பெட்டியில் வைத்திருந்த இந்திய பணம் ரூ.45 ஆயிரம், வெளிநாட்டுப் பணம் ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.70 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.