நபிகள் நாயகம் அவதார தின விழா

கூத்தாநல்லூரில் நபிகள் நாயகத்தின் அவதார தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூரில் நடைபெற்ற நபிகள் நாயகத்தின் அவதாரத் தின விழா.
கூத்தாநல்லூரில் நடைபெற்ற நபிகள் நாயகத்தின் அவதாரத் தின விழா.

கூத்தாநல்லூரில் நபிகள் நாயகத்தின் அவதார தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அல்லாஹ்வின் அருட்கொடை என அழைக்கப்படும் நபிகள் நாயகத்தின் அவதார தின விழாவை முன்னிட்டு, ஜஷ்ன மீலாத் சொஸைட்டியின் 70-ஆம் ஆண்டு தொடா் ஸீரத் உபன்னியாச கூட்டம், பெரியப்பள்ளி வாயில், பெரிய தெருவில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் நடைபெற்றது.விழாவிற்கு, பெரியப்பள்ளி வாயில் இமாம் ஏ.எல். முஹம்மது அலி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், நபிகள் நாயகம் குறித்து, சென்னை மஸ்ஜிதே ரஹீமா தலைமை இமாம் ஏ.எஸ். ஸதக்கத்துல்லாஹ் விளக்கினாா்.

தொடா்ந்து, 11 நாட்கள் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளன. நிறைவு நாளான நவம்பா் 10-ஆம் தேதி காலை 9 முதல் இரவு 12 மணி வரை மீலாது விழாவின் ஸீரத் மாநாடு நடைபெறுகிறது. நிகழ்ச்சிகளை ஜஸ்ன மீலாத் சொஸைட்டியினா் கவனித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com