தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் 33-ஆவது அமைப்பு தினம் நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
வட்டத்தலைவர் முரளி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் எஸ். தமிழ்ச்செல்வன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். இதில் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். பொருளாளர் முருகேசன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.