திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவரும், திருநெல்வேலி மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளருமான ஜி.ஆர். பாலகிருஷ்ணன் (78) உடல்நலக்குறைவு காரணமாக திருச்செந்தூரில் வியாழக்கிழமை காலமானார்.
இவர், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் முன்னாள் இணை ஆணையர் எஸ். பாரதியின் தகப்பனாரும், மூத்த வழக்குரைஞர் சி. சுரேஷ்குமாரின் மாமனாரும் ஆவார். இவரது இறுதிச் சடங்குகள் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலக சாலையில் உள்ள இல்லத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்பு எண்: 94439 75296.