திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திவாம்பாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஜேசீஸ் சங்கம் சார்பில் பல் விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியை மாலதி முகாமைத் தொடங்கி வைத்தார். ஜேசீஸ் தலைவர் மணிவண்ணன், செயலாளர் ஜெயராமன், பொருளாளர் வீரக்குமார், முன்னாள் தலைவர் நடராஜன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பற்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டு இலவசமாக பற்பசை மற்றும் பிரஷ் வழங்கப்பட்டது.