கூத்தாநல்லூரை அடுத்த வடபாதிமங்கலத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர்களுக்கான சேர்க்கை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை திருவாரூர் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன் தொடங்கி வைத்தார். மன்னார்குடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஐ.வி.குமரேசன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்டப் பிரதிநிதி டி. செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாசம் வரவேற்றார். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.