முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சார்பில் கோவி. ரெங்கசாமியின் பெற்றோர் நினைவாக இலவச மருத்துவ முகாம் , தில்லைவிளாகம் பத்ம செல்லத்துரை திருமண அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் மருத்துவர்கள் உதயகுமார், குருநாதன் ஆகியோர் தலைமையில் இருதய நோய் மருத்துவர்கள், சிறுநீரக மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பங்கேற்று, ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த அழுத்தம், இ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு, பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், மருந்து மற்றும் மத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இம்முகாமில், 240 பேருக்கு தலா 200 மதிப்புள்ள ஈசிசி பார்க்கப்பட்டது.
முகாமில் ரோட்டரி சங்கத் தலைவர் சிதம்பர சபாபதி, செயலாளர் பத்மநாபன் பொருளாளர் குமரேசன், முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர்கள் மணிவாசகம், ஜேம்ஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் செய்திருந்தனர்.