திருத்துறைப்பூண்டி அபிஷ்ட வரதராஜப் பெருமாள் கோயிலில் மகாளய அமாவாசையையொட்டி, 16 அடி உயர வைராக்கிய ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி அபிஷ்ட வரதராஜர் பெருமாள் கோயிலில் 16 அடி உயர வைராக்கிய ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். பிரதி சனிக்கிழமை மற்றும் ஆடி மாத மூல நட்சத்திரம் மற்றும் மாத அமாவாசை தோறும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மகாளய அமாவாசையையொட்டி வைராக்கிய ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயலர் முருகையன், மேலாளர் ஐயப்பன், வெங்கடேசன் பட்டாச்சாரியார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.