மரக்கன்றுகள் வழங்கல்

திருக்குவளை அருகே உள்ள சூரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  என்.எஸ்.எஸ். முகாமையொட்டி, மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருக்குவளை அருகே உள்ள சூரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  என்.எஸ்.எஸ். முகாமையொட்டி, மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு லைன்ஸ் சங்கத்தின் தலைவர் கண்ணன் முகாமைத் தொடங்கி வைத்தார். பள்ளி ஆட்சிமன்றக்குழு தலைவர் அ. மனஅழகன், பள்ளி செயலர் ஸ்ரீதேவி மனஅழகன் மற்றும் இணை செயலர் ம. எழில்நிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர்கள் கோ.சக்கரவர்த்தி மற்றும் ஜி. இராசாராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். 
இதைத்தொடர்ந்து சூரமங்கலம் அகத்தீஸ்வரர், மன்மதன் கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கே.ஆர். ராஜேந்திரன், தன்னார்வலர் எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com