ரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் கூத்தூர், நீலாப்பாடி மற்றும் கீழ்வேளூர் கிளைகள் சார்பில் ரத்ததான முகாம், குறுக்கத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் கூத்தூர், நீலாப்பாடி மற்றும் கீழ்வேளூர் கிளைகள் சார்பில் ரத்ததான முகாம், குறுக்கத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், தமிழகமெங்கும் தீவிரவாதத்துக்கு எதிரான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மற்றும் நாகை அரசு மருத்துவமனை நிர்வாகம் இணைந்து இம்முகாமை நடத்தின. 
அமைப்பின்  நாகை தெற்கு மாவட்டத் துணைத் தலைவர் து. ஜெய்லாவுதீன் முகாமைத் தொடங்கி வைத்தார். அமைப்பைச் சேர்ந்த 46 பேர் நாகை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு ரத்த தானம் செய்தனர். இதில், அமைப்பின் மாவட்டத் துணைச் செயலாளர் சர்புதீன், கிளைத் தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நாகை அரசு மருத்துவமனை ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com