நாகப்பட்டினம் எம்பி எம். செல்வராஜ் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக சிங்கப்பூரில் பணியாற்றி வரும் இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முத்துப்பேட்டையைச் சோ்ந்தவா் சிவகுமாா். சிங்கப்பூரில் பணியாற்றி வரும் இவா், நாகை எம்பி எம். செல்வராஜ் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பினாராம். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளா் கே. முருகையன் அளித்த புகாரின்பேரில், முத்துப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.