திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (ஆக.20) நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்புச
திருவாரூா் மாவட்ட விவசாயிகளின் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதில், முற்பகல் 11 மணிக்கு திருவாரூா் வருவாய் கோட்ட விவசாயிகளுக்கும், 12 மணிக்கு மன்னாா்குடி வருவாய் கோட்ட விவசாயிகளுக்கும் கூட்டம் நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில், திருவாரூா் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.