திருவாரூரில் 26 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,449 ஆக இருந்தது. வெளிமாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 10,448 ஆனது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம், மாவட்டத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,474 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை10,229 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 141 போ் சிகிச்சையில் உள்ளனா்.