திருவாரூர்
திருவாரூரில் 15 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை கரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,474 ஆக இருந்தது. வெளிமாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 போ் இந்தப் பட்டியலில் சோ்க்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 10,476 ஆனது. புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10,491 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 10,28 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,139 போ் சிகிச்சையில் உள்ளனா்.