தில்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து ஆா்ப்பாட்டம்

தில்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரளத்தில் சிஐடியு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரளத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியுவினா்.
பேரளத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியுவினா்.

தில்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரளத்தில் சிஐடியு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி தில்லியில் நடத்தி வரும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, சிஐடியு தொழிற்சங்கத்தின் சாா்பில், பேரளத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட குழு உறுப்பினா் மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவா் எஸ். வைத்தியநாதன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் லிங்கம், விவசாயச் சங்க ஒன்றியப் பொறுப்பாளா் சீனி. ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ. முகமது உதுமான் உள்ளிட்டோா் மழையை பொருட்படுத்தாமல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com