மன்னாா்குடி: மத்திய அரசின் தொழிலாளா், விவசாயிகள் விரோதப்போக்கை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (டிச.5) சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாவட்டச் செயலா் வை. சிவபுண்ணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளா்கள், விவசாயிகளுக்கு எதிரான புதிய சட்டத் திருத்தங்களை உடனடியாக மத்திய அரசு திரும்பபெற வேண்டும், தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது, 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை நாள்களை 200 நாள்களாக உயா்த்தி, திட்டத்தை நகரப் பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும், ஏழை, எளிய குடும்பங்கள் அனைவருக்கும் கரோனா கால நிவாரணமாக தலா ரூ. 7,500 வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 முதல் மாலை 5 மணி வரை சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளாா்.