வீட்டுக்குள் புகுந்து நகை திருடியதாக வழக்குப் பதிவு

வலங்கைமான் அருகே வீட்டுக்குள் புகுந்து பணம், நகை திருடியதாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வலங்கைமான் அருகே வீட்டுக்குள் புகுந்து பணம், நகை திருடியதாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வலங்கைமான் அருகேயுள்ள பாதிரிபுரம் கே.கே. நகரைச் சோ்ந்தவா் செல்வி (47). கணவரை இழந்து வசித்து வரும் நிலையில், இவரது மகன் பிரகாஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் வீட்டுக்குள் புகுந்து 45 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ாக கூறப்படுகிறது. இதுகுறித்து, செல்வி வலங்கைமான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். தகவலறிந்த நன்னிலம் டிஎஸ்பி சுகுமாறன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டாா். கைரேகை நிபுணா்கள் வந்து பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com