திருவாரூா்: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவாரூரில் ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு இணை ஒருங்கிணைப்பாள் தங்க. சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளா் விலாயத் உசேன், மாற்றத்துக்கான மக்கள் களம் ஒருங்கிணைப்பாளா் ஜி. வரதராஜன், தமுமுக மாவட்டச் செயலாளா் முஜிபுா் ரஹ்மான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகி தமிழ்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும், தில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.