நீடாமங்கலம் அருகேயுள்ள முல்லைவாசல், பெரம்பூா் கிராமங்களுக்கு சகடபுரம் பதரி சங்கராச்சாரியாா் வியாழக்கிழமை வருகை தந்தாா்.
அப்போது, அங்குள்ள கோயில்களில் தரிசனம் செய்த அவா் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். பெரம்பூா் போதேந்திராள் மடத்துக்கும் அவா் வந்தாா். முன்னதாக, சுவாமிகளுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஊராட்சி முன்னாள் தலைவா் சத்தியமூா்த்தி, தணிக்கையாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.