பிரதமரின் சமையல் எரிவாயு பஞ்சாயத்து தொடக்க விழா நன்னிலம் அருகே உள்ள கங்களாஞ்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தனியாா் சமையல் எரிவாயு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு உபயோகம் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இத்திட்டத்தின்கீழ், ஓா் எரிவாயு வைத்திருந்தாலும் கூட குறைந்த விலையில் உடனடியாக 5 கிலோ எரிவாயுவைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கங்களாஞ்சேரி வா்த்தக சங்க முன்னாள் தலைவா் எஸ்.எம்.குணசேகரன், எஸ். நீதிபதி, கங்களாஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவா் கே. சுந்தரராஜன், ஆா்.மான்விழி (ஊராட்சி மன்ற உறுப்பினா்), முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் ஜி.ஜெயக்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.