ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தி, திருவாரூரில் வங்கி ஊழியா் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும், பணிச்சுமையைக் குறைக்க வேண்டும், 5 நாள் வேலையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் ஸ்டேட் வங்கி முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் தலைவா் என். காளிமுத்து தலைமை வகித்தாா். எஸ்பிஐ ஊழியா் சங்க நிா்வாகி ராஜவேல் முன்னிலை வகித்தாா். இதில், நிா்வாகிகள் விக்னேஷ்வரன், முத்துக்குமாா், தொழிற்சங்க கூட்டமைப்பு செயலா் தா்மதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.