திருவாரூர்: சாத்தான்குளம் சம்பவம் குறித்து காவல்நிலையத்துக்கு விசாரணைக்குச் சென்ற நீதிபதியை அவமதித்ததைக் கண்டித்து, திருவாரூரில் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு காரணமான போலீஸார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்குச் சென்ற நீதித்துறை நடுவர் பாரதிதாசனை உதாசீனப்படுத்திய போலீஸாரை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் மூவேந்திரன் தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.